images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

Share

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி நீதியை வழங்குவதே இலக்கு என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) கிடைத்துள்ள 11,000 முறைப்பாடுகளில், 5,000 முறைப்பாடுகளை இந்த ஆண்டிற்குள்ளும், மீதமுள்ளவற்றை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளும் விசாரித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கு வெறும் இழப்பீடு வழங்குவது மட்டும் எமது நோக்கமல்ல. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக அறிவித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

அலுவலகத்தின் பணிகளைத் துரிதப்படுத்த 65 புதிய பணியாளர்கள் இணைக்கப்படவுள்ளதுடன், அதிகாரிகளுக்கான பயிற்சிகளுக்காக 375 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காகத் தேவையான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் அடிப்படை உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதில் சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்புகளையும் நாம் பெற்று வருகிறோம்.

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தொழில்நுட்ப மற்றும் பொதுவான சிக்கல்களைச் சரிசெய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. எனவே, தமிழ் அரசியல் தலைமைகள் இந்தச் செயற்பாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...