images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

Share

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி நீதியை வழங்குவதே இலக்கு என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) கிடைத்துள்ள 11,000 முறைப்பாடுகளில், 5,000 முறைப்பாடுகளை இந்த ஆண்டிற்குள்ளும், மீதமுள்ளவற்றை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளும் விசாரித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கு வெறும் இழப்பீடு வழங்குவது மட்டும் எமது நோக்கமல்ல. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படையாக அறிவித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

அலுவலகத்தின் பணிகளைத் துரிதப்படுத்த 65 புதிய பணியாளர்கள் இணைக்கப்படவுள்ளதுடன், அதிகாரிகளுக்கான பயிற்சிகளுக்காக 375 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காகத் தேவையான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் அடிப்படை உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இதில் சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்புகளையும் நாம் பெற்று வருகிறோம்.

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தொழில்நுட்ப மற்றும் பொதுவான சிக்கல்களைச் சரிசெய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. எனவே, தமிழ் அரசியல் தலைமைகள் இந்தச் செயற்பாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...

24116474 fisherman
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்குக் கடலில் கைதான 11 மீனவர்கள் திக்கோவிட்டவுக்கு அழைத்து வரப்பட்டனர்! தெஹிபாலவின் பின்னணி குறித்து சந்தேகம்!

தெற்குக் கடற்பரப்பில் வைத்து சுமார் 270 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடிப்...