வவுனியா வடக்கில் கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்: தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம்!

26 6975d971ceff4

வவுனியா வடக்கு பகுதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல்ஓயா (Kiwul Oya) நீர்ப்பாசனத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

மிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன், மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமிழ் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அரசின் பிடிவாதம்: தமிழ் அரசியல் தரப்பிலிருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் நோக்கில், சிவில் அமைப்புகளின் ஆதரவைத் திரட்டத் தமிழ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாளை, ஜனவரி 26 ஆம் திகதி, வவுனியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) அலுவலகத்தில் பொது அமைப்புகளுடனான விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொது அமைப்புகளுக்கும் தமிழ் கட்சிகள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன.

இத்திட்டமானது வவுனியா வடக்கின் நிலப்பரப்பு மற்றும் இனப்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ள நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

 

Exit mobile version