ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில், குழந்தையின் தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தை காரணமாகக் குழந்தையின் தந்தை சந்தேகம் எழுப்பியதால், தற்போது காவல்துறையினர் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தது.
மனைவியின் தொலைபேசியைச் சோதனை செய்தபோது, அதில் தவறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததைக் கணவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவரது மனைவி ஓரினச்சேர்க்கையில் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குழந்தையின் உடலை நாளை (நவம்பர் 9) தோண்டி எடுத்து மறு பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை நடத்தக் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

