images 4 1
செய்திகள்உலகம்

சூடான் உள்நாட்டுப் போர்: 2.5 ஆண்டுகளாகத் தொடரும் மோதல் – ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் பலி!

Share

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த உள்நாட்டுப் போரால் நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் காரணமாகச் சுமார் 1.5 கோடி பேர் (15 மில்லியன்) தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர்.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றித் தவித்து வருகின்றனர்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் காரணமாக அங்குள்ள கோர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...