images 4 1
செய்திகள்உலகம்

சூடான் உள்நாட்டுப் போர்: 2.5 ஆண்டுகளாகத் தொடரும் மோதல் – ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் பலி!

Share

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த உள்நாட்டுப் போரால் நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் காரணமாகச் சுமார் 1.5 கோடி பேர் (15 மில்லியன்) தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர்.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றித் தவித்து வருகின்றனர்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் காரணமாக அங்குள்ள கோர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...