anura 3
செய்திகள்இலங்கை

இலங்கை முழுவதும் அவசரகால நிலை தொடர்ந்தும் நீடிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Share

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை (Public Emergency) தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, இக்கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகம் இலங்கை முழுவதற்கும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகப் பேணுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே இந்த தீர்மானத்தின் பிரதான நோக்கமாகும்.

பேரழிவைத் தொடர்ந்த மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்த இந்த அவசரகால நிலை நீடிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...