உலகிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் மிகப்பெரியதும், அதிக பெறுமதி வாய்ந்ததுமான அரிய வகை மாணிக்கக்கல் இன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு “Star of Pure Land” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல் 3,563 கரட் எடையைக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் புகழ்பெற்ற இரத்தினக்கல் பூமியான இரத்தினபுரி பகுதியில் இது கண்டெடுக்கப்பட்டது.
இது ஆறு கதிர்கள் (Six-ray) கொண்ட மிகத் தெளிவான நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கல்லின் பெறுமதி 300 மில்லியன் முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 12,000 கோடி ரூபாய்க்கும் மேல்) வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஏனைய ஊதா நிற மாணிக்கக்கற்களை விட இது தனித்துவம் வாய்ந்தது என வலியுறுத்தினார்.
இலங்கை உலகளவில் “இரத்தினபுரி” (இரத்தினங்களின் நகரம்) எனப் போற்றப்படும் நிலையில், இந்த “Star of Pure Land” கண்டுபிடிப்பு, சர்வதேச மாணிக்கக்கல் சந்தையில் இலங்கையின் நன்மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது. உலகளாவிய ஏல விற்பனையாளர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

