பிரித்தானிய தேர்தலில் வெற்றிபெற்ற ஈழ தமிழ் பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து
பிரித்தானிய தேர்தலில் வெற்றிபெற்ற ஈழ தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
பிரித்தியனியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
}|
இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.