பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால் இணையவழிப் பாலியல் மிரட்டலுக்கு (Cyber Extortion) உள்ளாகி, அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
பெங்களூரில் கல்வி பயிலும் அந்த மாணவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒருவருடன் நட்புடன் பழகியுள்ளார்.
இந்த நட்பின் போது மேற்கொள்ளப்பட்ட காணொளி அழைப்புகளில் (Video Calls) குறித்த நபர் மாணவனுக்குத் தெரியாமல் அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான காணொளிகளை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து, அந்த நபர் மாணவனுக்கு மிரட்டல் விடுத்து ஆரம்பத்தில் 36,000 இந்திய ரூபாயைப் பறித்தார்.
பணம் கொடுத்த பின்னரும், மேலதிக பணம் கேட்டு அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. காணொளிகளைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், பெங்களூர் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தார்.
காவல்துறை இந்த இணையவழிப் பாலியல் மிரட்டல் கும்பல் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.