russia cancer vaccine news 2024 12 46d8f70b525bd47d7c40b1fc71788a65 3x2 1
செய்திகள்இலங்கை

ரஷ்ய புற்றுநோய் தடுப்பூசி குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை

Share

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix), புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே (pre-clinical stage) இருப்பதாகவும், அறிவியல் ரீதியான சரிபார்ப்பு மூலம் அதன் செயற்திறன் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

என்டோரோமிக்ஸ் தடுப்பூசி “100 சதவீதம் புற்றுநோயைக் குணப்படுத்தும்” என்று கூறி வைரலாகப் பரவும் பதிவுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் எந்தவொரு முன்னேற்றமும் வரவேற்கத்தக்கது என்றாலும், இந்தத் தடுப்பூசி இன்னும் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் தான் உள்ளது என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் செயற்திறன் குறித்து எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன், இது சரியான புற்றுநோயியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...