850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

Share

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை (29) இரவு, வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர் நெடுந்தீவு கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த கடற்படையினர், அவற்றை எல்லைக்கு அப்பால் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எல்லைக்குள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு படகைக் கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதில் இருந்த மூன்று இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்வளப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...