tsunami 750x375 1
செய்திகள்இலங்கை

சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவேந்தல்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு!

Share

இலங்கையை உலுக்கிய சுனாமி பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகளும், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலையினால், இலங்கையில் 35,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டது.

இம்முறை பிரதான நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி மட்டுமன்றி, அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாகச் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளை நினைவூட்டவும் இந்தத் தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...