tsunami 750x375 1
செய்திகள்இலங்கை

சுனாமி பேரழிவின் 21-ஆம் ஆண்டு நினைவேந்தல்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு!

Share

இலங்கையை உலுக்கிய சுனாமி பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் (டிசம்பர் 26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகளும், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலையினால், இலங்கையில் 35,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், சுமார் 5,000 பேர் காணாமல் போயினர். இந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினமாக’ அறிவிக்கப்பட்டது.

இம்முறை பிரதான நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி மட்டுமன்றி, அண்மைய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களுக்காகவும் மாவட்ட ரீதியாகச் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளை நினைவூட்டவும் இந்தத் தேசிய பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...