கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற மிகக்குறுகிய காலப்பகுதியில் சர்வதேச ஊழல் தரவரிசைப் பட்டியலில் (CPI) ஒரு பாரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கியிருந்த இலங்கை, தற்போது 107-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகச் சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
பல தசாப்தங்களாகத் தீர்க்க முடியாத ஊழல் கறையைத் துடைத்து, 70 வருடப் பாரம்பரியக் கட்சிகள் செய்யத் தவறியதை இந்தப் புதிய ஆட்சிமுறை சாத்தியமாக்கியுள்ளதாகப் பொதுமக்களும் அரசியல் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிகார மட்டங்களில் வேரூன்றி இருந்த ஊழல் சங்கிலியை உடைத்து, நிர்வாகப் பொறிமுறையைச் சீரமைத்ததன் மூலமே சர்வதேச அரங்கில் இலங்கையினால் இந்த நற்பெயரை மீட்டெடுக்க முடிந்துள்ளது.
உலகளவில் ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை வேகமாக முன்னேறியிருப்பது, அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் ‘சிஸ்டம் சேஞ்ச்’ என்பது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமல்ல, அது செயலில் உள்ள ஒரு யதார்த்தம் என்பதற்கான சான்றாகப் பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தின் இந்த வெளிப்படையான நிர்வாகம், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடையே இலங்கையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிற்குத் தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஊழல் சங்கிலி உடைக்கப்பட்டதன் மூலம் நாட்டின் வருமானம் முறையாகத் திரட்டப்பட்டு, அது மக்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை இந்தத் தரவரிசை முன்னேற்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அநுர அரசாங்கத்தின் கீழ் இலங்கை ஒரு தூய்மையான அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர்வதை இது பறைசாற்றுகிறது.