இலங்கை மத்திய வங்கி கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் மீது கணக்கெடுப்பு மற்றும் பதிவு கட்டாயம்

25 68fde7b6a965a

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக ஒரு கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளது.

தற்போது, இந்தச் சேவை வழங்குநர்களிடமிருந்து ஒரு கேள்வித்தாள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், இந்தக் கிரிப்டோ சேவை வழங்குநர்கள் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் பணமோசடி (Money Laundering) போன்ற நடவடிக்கைகளுக்கு கிரிப்டோகரன்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, சேவை வழங்குநர்களைப் பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Exit mobile version