tamilni 295 scaled
செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி

Share

அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது விராட் கோலி மார்னஸ் லாபுசாக்னேவை விடாமல் பார்த்த காணொளி வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதி மோதலின் போது, ​​ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பிற்கு பின் துடுப்பாட்டம் செய்ய வரும் மார்னஸ் லாபுசாக்னேவை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பார்த்துள்ளார்.

பதிலுக்கு மார்னஸ் லாபுசாக்னேவும் கோலியை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துள்ளார்.

குறிப்பாக 2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்குப் பழிவாங்கும் இந்தியாவின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை பொய்த்துப் போனது.

2023 ODI உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியையும் வென்றதன் மூலம், குறிப்பிடத்தக்கவகையில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதற்கு நேர்மாறாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது தொடக்க இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தடுமாறியது, ஆனால் அடுத்த எட்டு போட்டிகளில் வெற்றி விளையாடி இறுதிப் போட்டியில் நுழைந்து, icc world cup championship என்ற பட்டத்தையும் வென்றது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...