SriLanka Team Win
இலங்கைசெய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி!

Share

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், டக்வத் லூயில் முறைமைக்கு அமைய போட்டி 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்படியாக குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தசுன் சானக்க 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவர்கள் நிறைவில் கசல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகப்படியாக டேவிட் வோர்னர் 37 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...