19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் பியேஒவ் சுற்றின் முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
அன்டிகுவாவில் அமைந்துள்ள சேர் விவேயின் றிச்சர்ட்ஸ் அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 6 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி சார்பில் துனித் வெள்ளாளகே 113 ஓட்டங்களையும், சோமரத்ன 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
233 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணி சார்பில் மாரி 44 ஓட்டங்களையும், றொனன் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதற்கமைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 5 ஆவது இடத்தை தீர்மானிப்பதற்கான பிளேஒவ் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment