tamilni 216 scaled
செய்திகள்விளையாட்டு

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

Share

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விகள் காரணமாக அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளாது போட்டித் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.

எவ்வாறெனினும், உலகின் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 அணிகள் உள்ளிட்ட சகல விதமான அணிகளின் தலைமை பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

இது கடினமான தீர்மானம் என்றாலும் பொருத்தமான தருணத்தில் தாம் இந்த தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உதவி செய்த பயிற்றுவிப்பாளர்கள் அணி முகாமைத்துவம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...