tamilni 216 scaled
செய்திகள்விளையாட்டு

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

Share

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விகள் காரணமாக அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளாது போட்டித் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.

எவ்வாறெனினும், உலகின் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 அணிகள் உள்ளிட்ட சகல விதமான அணிகளின் தலைமை பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

இது கடினமான தீர்மானம் என்றாலும் பொருத்தமான தருணத்தில் தாம் இந்த தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உதவி செய்த பயிற்றுவிப்பாளர்கள் அணி முகாமைத்துவம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...