tamilni 216 scaled
செய்திகள்விளையாட்டு

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

Share

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விகள் காரணமாக அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளாது போட்டித் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.

எவ்வாறெனினும், உலகின் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 அணிகள் உள்ளிட்ட சகல விதமான அணிகளின் தலைமை பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

இது கடினமான தீர்மானம் என்றாலும் பொருத்தமான தருணத்தில் தாம் இந்த தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உதவி செய்த பயிற்றுவிப்பாளர்கள் அணி முகாமைத்துவம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....