tamilni 216 scaled
செய்திகள்விளையாட்டு

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

Share

தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விகள் காரணமாக அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளாது போட்டித் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.

எவ்வாறெனினும், உலகின் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 அணிகள் உள்ளிட்ட சகல விதமான அணிகளின் தலைமை பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

இது கடினமான தீர்மானம் என்றாலும் பொருத்தமான தருணத்தில் தாம் இந்த தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு உதவி செய்த பயிற்றுவிப்பாளர்கள் அணி முகாமைத்துவம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...