tamilni 569 scaled
செய்திகள்விளையாட்டு

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Share

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரானது அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 22-ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடருக்கான போட்டி அட்டவணையை அண்மையில் வௌளியானதுக்கமைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சிவம் தூபேவிற்கு ரஞ்சி போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குணமடைய சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் அவர் இவ்வருட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்று சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் ஷிவம் தூபேவை தொடர்ந்து மேலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ரி20 தொடரில் விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில் அவர்கள் இருவருமே காயமடைந்துள்ளதால் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...