செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜின் நெகிழ்ச்சி செயல்

tamilni 194 scaled
Share

இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜின் நெகிழ்ச்சி செயல்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ், தனக்கு கிடைக்கப் பெற்ற பரிசுப் பணத்தை மைதான பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில் இந்திய அணி பத்து விக்கட்டுகளினால் அபார வெற்றியீட்டியது. 21 ஓட்டங்களைக் கொடுத்து ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற சிராஜ் போட்டியின் ஆட்டநாயகாக தெரிவானார்.

இதனால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டு 5000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபா- 16 இலட்சம்) பணப் பரிசு சிராஜிற்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பணப் பரிசு முழுவதையும் அவர் மைதானப் பணியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த முழுப் பரிசுத் தொகையையும் அவர் மைதான பணியாளர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும் மைதானப் பணியாளர்கள் இல்லாவிட்டால் போட்டியை நடத்தியிருக்க முடியாது என அவர் பாராட்டியுள்ளார்.

சிராஜ் மைதானப் பணியாளர்களுக்கு தனது பரிசுப் பணத்தை வழங்கியமை சமூக ஊடகங்களில் பெரிதாக பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏற்கனவே ஆசிய கிரிக்கெட் பேரவையும் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டும் கொழும்பு மற்றும் கண்டி மைதான பணியாளர்களுக்கு 50000 டொலர்களை பரிசாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...