ஐசிசி இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் இன்று பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை, சவாலான ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஷித் கான், முதலில் களத்தடுப்பில் (Bowling) ஈடுபடத் தீர்மானித்துள்ளார். ஆடுகளத்தின் தன்மை மற்றும் பனிப்பொழிவு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனடிப்படையில், தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி (Batting) ஆப்கானிஸ்தான் அணிக்குச் சவாலான இலக்கை நிர்ணயிக்கக் களமிறங்கவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சுத் தாக்குதலைத் தென்னாபிரிக்காவின் அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பதே இப்போட்டியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. உலகக் கிண்ணப் புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமானதாகும்.