Karu Flood News Pix 03
செய்திகள்இலங்கை

சோமாவதி – சுங்காவில வீதி 3 அடி நீரில் மூழ்கியது: போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

Share

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இரண்டாம் நாளாகவும் இன்றும் (19) ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நேற்று (18) நண்பகல் முதல் பொலிஸாரால் மூடப்பட்ட இந்த வீதி, இன்று மேலும் மோசமடைந்துள்ளது.

சோமாவதி – சுங்காவில பிரதான வீதியின் திக்கல (Thikkala) பகுதியில் தற்போது சுமார் 3 அடிக்கும் அதிக உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து வருவதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதியூடான அனைத்து வகையான போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சோமாவதி புனித பூமியை தரிசிக்கத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், தற்போதைய அபாய நிலையைக் கருத்திற்கொண்டு மேலதிக அறிவிப்பு வரும் வரை இப்பயணத்தைத் தவிர்க்குமாறு அல்லது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக நிலவி வரும் மழையினால் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...