“நலன் முரண்பாட்டில் செயல்பட்ட சிறிதரன்”: நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

25 68fa0ce16e51c

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய (அக்டோபர் 23) நாடாளுமன்ற அமர்வில், இது தொடர்பான ஒரு கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.

சிறிதரன் ஊழல் செய்ததாகவும், நலன் முரண்பாட்டுடன் செயல்பட்டதாகவும், மேலும் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் தசநாயக்க குற்றம் சாட்டினார்.

சிறிதரன் உறுப்பினராக உள்ள அரசியலமைப்பு பேரவைக்கு, குறித்த முறைப்பாடு தொடர்பில் தெரிவிக்க அவர் தவறிவிட்டதாகவும் சாமர குறிப்பிட்டார்.

சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு (CIABOC) உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்புப் பேரவையின் பொறுப்பாகும்.

எனவே, சிறிதரன் தனது சொந்த வழக்கின் முடிவைப் பாதிக்கக்கூடிய முடிவுகளில் ஈடுபட்டுள்ளதால், இது ஒரு நலன் முரண்பாடாக அமைகிறது என்று தசநாயக்க வாதிட்டார்.

Exit mobile version