அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை! சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

MediaFile 15

நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அவ்வப்போது மழை பெய்யும் இடங்கள்: வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்.

இடைக்கிடையே மழை: வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Exit mobile version