கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷானி பலத்த பாதுகாப்புடன் திங்கட்கிழமை (நவம்பர் 10) வவுனியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவரால் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மோசடியாக வழங்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதவான், இந்த மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

