tamilni 115 scaled
இந்தியாசெய்திகள்

செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்

Share

செருப்பு சின்னத்தில் கூட வெற்றி பெறுவேன்: சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததை திட்டமிட்ட செயலாக பார்க்கிறேன் என்றும், மக்களவை தேர்தலில் செருப்பு சின்னம் கொடுத்தால்கூட வெற்றி பெறுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்துள்ளேன், இன்று நீதிமன்றத்தில் வரலாம், அடுத்து உச்சநீதிமன்றம் செல்வேன்.

நான் முதலில் புலி கேட்டேன். அது தேசிய விலங்கு என்று சொன்னார்கள், அடுத்து மயில் கேட்டேன், தேசிய பறவை என்றார்கள்.

நாங்கள் ஏற்கனவே 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறோம், 7 விழுக்காடு.

எந்த சின்னமாக இருந்தாலும் போட்டியிடுவேன், சீமானின் சின்னம் என்ன என்று பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் வெற்றி பெறுவேன், வேளாண் குடிமகன் என்பதால் கரும்பு விவசாயி சின்னத்திற்காக போராடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...