images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

Share

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரர்களை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் காரைக்குடியில் நேற்று (நவம்பர் 27) நாம் தமிழர் கட்சியால் அனுசரிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இலங்கையின் இறுதிப் போர் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.

சீமான் தனது உரையில், “வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோர்: “போர்க்காலத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதிகள் கூறினர். அதன்படி, வெள்ளைக்கொடியுடன் சென்று 300 பேர் சரணடைந்தனர்.”

“வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது சர்வதேசப் போர் மரபு. இருப்பினும், அவர்களை எப்படி கொலை செய்தீர்கள்? ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.”

“முள்ளிவாய்க்காலில் இருந்து எல்லோரும் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என அழைத்தவர்கள் சிங்கள இராணுவத்தினர். சரணடைந்த 10,000க்கும் மேற்பட்டோர் இப்போது எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது சர்வதேசத்திலிருந்தும் எவரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?”

மேலும், அவர் தனது உரையை முன்னெடுத்தபோது, தேசிய தலைவரையும் நினைவு கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...