25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

Share

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் (Organized Crime Gangs) தொடர்புகளைப் பேணி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவின் (Police Special Investigation Unit) அதிகாரங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவு, காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் நடத்தை மற்றும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

தற்போதுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரிவுக்கு மேலதிக அதிகாரிகளை நியமித்து, புலனாய்வு அமைப்புகளுடன் நேரடித் தொடர்புகொள்ளத் தேவையான அனுமதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களின் தொலைபேசித் தொடர்புகளைக் கண்காணித்ததில், பல காவல்துறை அதிகாரிகள் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. குறித்த அதிகாரிகள் மீதான ஆரம்ப விசாரணைகளை இந்தப் பிரிவு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...