விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு அளக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்துள்ளது.
சமீபத்தில், பெரிய வெங்காய அறுவடைகளை வாங்கும் திட்டத்தை லங்கா சதோச அறிமுகப்படுத்தியபோது, ஒரு பெரிய வெங்காயத்தின் விட்டம் (Diameter) 35-65 மி.மீ. வரை இருக்க வேண்டும் மற்றும் ஒரு கிலோவில் 8 வெங்காயம் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்ற அளவுகோல்கள் விதிக்கப்பட்டன. இந்தக் கடுமையான நிபந்தனைகளால் பல விவசாயிகள் தங்கள் அறுவடைகளை விற்க முடியாதென எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய லங்கா சதோச நிறுவனத்தின் தர உறுதிப் பிரிவின் தலைவர் லஹிரு சமங்க, பின்வரும் விளக்கங்களை வழங்கினார். வெங்காயத்தை வாங்கும் போது, சம்பந்தப்பட்ட மையங்களில் வெங்காயத்தின் அளவு அளவிடப்படுவதில்லை. நாங்கள் சுற்றளவை அளவிடுகிறோம் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தரநிலை சுற்றளவைக் குறிப்பிடவில்லை. எங்கள் தரநிலையில் குறிப்பிடப்பட்டுள்ளது விட்டம். விட்டம் என்பது வெங்காயத்தைக் குறுக்காக வெட்டும்போது எடுக்கப்படும் அளவு.
வெங்காயம் ஒருபோதும் வயலில் அளவிடப்படுவதில்லை. எங்கள் அதிகாரிகள் கண் மட்டத்தில் மட்டுமே சரிபார்க்கிறார்கள்.” இதுவரை எந்த நேரத்திலும், எந்த மையத்திலும் அளவு அடிப்படையில் வெங்காயம் நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் விற்பனைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே இந்த கொள்வனவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக லங்கா சதோச தெரிவித்துள்ளது.