41 1
செய்திகள்அரசியல்இலங்கை

சாரா ஜெஸ்மின் உயிரோடு இருக்கிறார்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜயபால அதிரடித் தகவல்!

Share

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் (புலத்தினி) இன்னும் உயிரோடு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சாரா ஜெஸ்மின் ஏற்கனவே சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் மரணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட தகவல்களில் உண்மையில்லை. அவர் உயிரோடு இருப்பதாகத் தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் இந்தியாவில் இருப்பதாகக் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் இந்தியாவில் மறைந்திருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாரா ஜெஸ்மின் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய விசேட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைக்குத் தடையாக அமையும் என்பதால் அவர் இருக்கும் இடம் குறித்த மேலதிக விபரங்களை இப்போது வெளியிட முடியாது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படுவது உறுதி என உறுதியளித்தார்.

விசாரணைகள் மிகவும் இரகசியமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன, ஆனால் அவை பொதுவெளியில் பகிரப்பட்டால் குற்றவாளிகள் தப்பிவிட வாய்ப்புள்ளது என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...