Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

Share

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இது குறித்துத் தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் நேற்று (மார்ச் 26, 2026) பெற்றோல் மீதான சிறப்பு கூடுதல் உற்பத்தி வரியை (Special Additional Excise Duty) 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகக் குறைத்துள்ளதுடன், டீசல் மீதான 10 ரூபாய் வரியை முழுமையாக நீக்கியுள்ளது. “இந்திய நுகர்வோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் குறைக்க மோடி அரசாங்கம் இவ்வாறான தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் விலையைக் குறைப்பதற்கும் இதுவே மிகப்பொடுத்தமான தருணம்” எனச் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அரசாங்கம் வரிகளைக் குறைக்காமல் இருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பதைக் காரணம் காட்டி உள்நாட்டில் விலைகளை உயர்த்துவதை விடுத்து, வரிச் சலுகைகள் மூலம் மக்களுக்குப் பலனைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறான வரிக்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைத் திரட்டிப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...