images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

Share

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயகத்தின் முக்கிய தூணான ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் காவல்துறையைக் கருவியாகப் பயன்படுத்துவதாக அவர் சாடினார். இது ஒரு ‘காவல்துறை அரசை’ உருவாக்கும் முயற்சி என அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினரின் சுதந்திரமான செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிடுவதால், அதிகாரிகள் நடுநிலையாகப் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை சர்வாதிகாரத்தை நிலைநாட்டவோ அல்லது மக்களின் தகவலறியும் உரிமையைப் பறிக்கவோ வழங்கப்பட்டது அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பாதீட்டு வாக்கெடுப்புகளிலும் அரசாங்கத்தின் சர்வாதிகாரத் தலையீடுகள் ஊடுருவியுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக நீர்கொழும்பு மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தும் ஊடகங்களின் உரிமையைப் பறிப்பது நாட்டின் 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமையை மீறுவதற்குச் சமமாகும் என சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...