sabarimala 2025 11 be56e17ca03c9aed28b89ec1142a3bf0 3x2 1
செய்திகள்இந்தியா

சபரிமலை கோயில் தங்கத் திருட்டு வழக்கு: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவர் கைது!

Share

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற தங்கத் தகடு மற்றும் தங்கக் கவசத் திருட்டு விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சபரிமலை ஆலயத்தின் துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் மற்றும் கதவு நிலைகளில் இருந்த தங்கத் தகடுகள் திருடப்பட்டமை தொடர்பாகக் கேரளா காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் அடுத்தகட்டமாக நேற்று (19.12.2025) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்:

சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணியை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO).

திருடப்பட்ட தங்கத்தை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த தங்க ஆபரணக் கடை உரிமையாளர். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காகத் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இத்திருட்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தனியாக நிதி மோசடி விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தத் தனிப்பட்ட விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போன்ற புனிதத் தலத்தில் இடம்பெற்ற இந்தத் தங்கத் திருட்டுச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...