109807728 duglasdevanantha 3
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு எதையும் தாம்பாளத் தட்டில் தந்துவிடாது; பேசிப் பெற பலமான ஆணை வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Share

தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமான நிலைப்பாடாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

எந்த அரசும் தமிழ் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் பங்கெடுத்தமையே பேச்சுவார்த்தைக்கான தளமாக அமைந்தது. இப்போது ஆளும் கட்சியில் உள்ள தமிழ் எம்.பிக்கள் அரசிடம் பேசிப் பெறும் ஆற்றல் இன்றி அரசுக்குள் கரைந்து போயுள்ளனர் எனச் சாடினார்.

அண்மையில் இடம்பெற்ற தனது கைது மற்றும் கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு சீர்செய்வதற்காக விரைவில் தேசிய மாநாடு நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் கட்சி கட்டமைப்புகளைச் சீராக்கி, மீண்டும் ஒரு அரசியல் பலத்தைப் பெற்று, அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காண்பதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...