பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, நீதி அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன, குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் பொது வெளியில் விவாதிக்கப்பட்டு, சட்டமியற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.