டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள் – நாளை ஜனாதிபதி அநுரகுமார ஆரம்பித்து வைக்கிறார்!

Housing2

‘டித்வா’ (Dithwa) சூறாவளி அனர்த்தத்தினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் இழப்பீடு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் நாளை (09) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ‘Rebuilding Sri Lanka’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பின்வரும் பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன:

அனுராதபுரம் மாவட்டம்: கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய மற்றும் சிறிமாபுர.

குருநாகல் மாவட்டம்: நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி, ரிதீகம மற்றும் தொடம்கஸ்லந்த.

சூறாவளியினால் வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, நவீன தரத்துடனான வீடுகள் அரச நிதியுதவியுடன் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் அரசாங்கத்தின் விரிவான மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

 

 

Exit mobile version