Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

Share

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே அமைந்துள்ள வளிமண்டலத்தில் குறைந்த அழுத்தப் பகுதி (Low-Pressure Area) உருவாகுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இது இலங்கைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மழை பெய்யும் நிலை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி.

இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நிலவும் மழை காரணமாகப் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியாளர் எச்.எம். ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
8f144b60 f970 11ef 9e61 71ee71f26eb1.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் இளம் வயதுக் கர்ப்பங்கள் அதிகரிப்பு; வெலிக்கந்தையில் அதிக சிறுவர் குற்றங்கள் – அமைச்சர் எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இளம் வயதுக் கர்ப்பங்கள் மற்றும் இணையவழி வன்முறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும்...

Screenshot 2025 12 02 at 16.09.23.webp
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளித் தாக்கம்: 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிப்பு – விசேட பாதுகாப்புத் திட்டம் தயார்!

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் விளைவாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது தாய், தந்தை...

vikatan 2025 06 24 deer3cum america iran
உலகம்செய்திகள்

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்க முற்பட்டால், அங்குள்ள அமெரிக்க இராணுவத்...

bee721eca96246c6bdfe477cb1fb978e
செய்திகள்உலகம்

60 பில்லியன் டொலர் வருவாய்: நெட்ஃபிளிக்ஸை முந்தியது யூடியூப்!

உலகின் முன்னணி காணொளி தளமான யூடியூப், 2025 ஆம் நிதியாண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான...