27 8
இந்தியாசெய்திகள்

இலங்கையில் கைதான தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ராகுல் காந்தி கடிதம்

Share

இலங்கையில் கைதான தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்பில் ராகுல் காந்தி கடிதம்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi) கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியியட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்தியாவின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதியிடம் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றுவதால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறித்த மீன்பிடி படகுகளை மீட்க இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை சிறைகளில் 141 தமிழக கடற்றொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளார். அதில் 96 பேர் தண்டனை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் 198 படகுகளையும் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...