04 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புல்மோட்டையில் சட்டவிரோத டீசல் விற்பனை: 390 லீற்றர் எரிபொருளுடன் வர்த்தகர் கைது!

Share

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவதாக புல்மோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (03) இரவு விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சட்டவிரோத விற்பனை தொடர்பாக புல்மோட்டை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இவர் அதிக இலாபத்திற்காக டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கைப்பற்றப்பட்ட டீசல் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

எரிபொருளைச் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறான முறைகேடுகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...