1769314931 IMG 20260125 WA0005
செய்திகள்இலங்கை

புதிய சட்ட வரைபும் ஒரு அடக்குமுறை கருவியே: பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

Share

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள “அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட வரைபு” (PSTA), அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய வரைபானது பாதுகாப்புத் துறையினருக்குத் தொடர்ந்தும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. இது ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை முடக்கும் ஒரு உத்தியாக அமையும்.

1979-இல் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்ட PTA இன்னும் நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாதம் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் இன்றி பாதுகாப்புத் தரப்பினர் தமக்கு விருப்பமான அர்த்தத்தில் இதைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

வடகிழக்கில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் கொடூரம், கொழும்பு ‘அரகலய’ போராட்டத்தின் போது தெற்கு மக்களால் உணரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளுக்குக் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், அந்த இடைவெளியில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

ஒரு மனிதனின் நடமாடும் சுதந்திரத்தைப் பொலிஸாரே தீர்மானிக்கும் நிலை உருவாகும். புதிய சட்டத்தின் கீழ் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே தவிர, ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் அற்றதாக நீதித்துறை மாற்றப்பட்டுள்ளதாக அவர் சாடினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், ஒரு வருடம் கடந்த நிலையிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, பெயரளவில் சில மாற்றங்களைச் செய்து அதே அடக்குமுறை சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...