IMG 20220401 WA0047
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணக் கொடுப்பனவில் பாரபட்சம்: புத்தளம் – கொழும்பு வீதியை மறித்து முந்தல் மக்கள் போராட்டம்!

Share

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம மக்கள் நேற்று (20) மாலை பாரிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வீரபுர, கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், நேற்று மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை புத்தளம் – கொழும்பு பிரதான வீதியை மறித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வெள்ளத்தினால் உண்மையாகப் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் பெயர்கள் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தகுதியுள்ளவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்கள் வீதியை மறித்ததால், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை (22) முந்தல் பிரதேச செயலகத்திற்கு வந்து புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பொய்யான தகவல்களை வழங்கி இந்தக் கொடுப்பனவைப் பெற முயற்சிப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. எவ்விதப் பாகுபாடும் இன்றி உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் இக்கொடுப்பனவு கிடைப்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

 

 

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...