26 696f6b736a296
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரைகுறை வீடுகளில் எத்தனை காலம் வாழ்வது?: யாழில் வீட்டுத் திட்டக் கொடுப்பனவு கோரி ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

Share

யாழ். மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கக் கோரி, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (19) செவ்வாய்க்கிழமை பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு தற்போதைய ஆளுநர் என். வேதநாயகன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் இந்த வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், பல வருடங்கள் கடந்தும் அவற்றுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

கொடுப்பனவுகள் கிடைக்காததால் வீடுகள் அரைகுறையாக நின்றுவிட்டன. இதனால் மழைக்காலங்களில் இருக்க இடமின்றிப் பயனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது மனவேதனையை வெளிப்படுத்தினர்.”தற்போதைய அரசாங்கம் பாரபட்சமற்றது எனக் கூறினாலும், பழைய திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டுப் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.”

இத்திட்டத்தை ஆரம்பித்த அதிகாரியே தற்போது ஆளுநராக இருக்கும் நிலையில், அவர் இது குறித்து மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி வீதியில் நடந்து திரிகிறார். ஆனால், அரைகுறை வீடுகளில் அல்லல்படும் எங்களைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை” எனச் சாடினர்.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் கையளித்தனர். இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...