images 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவப் பதவிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை (21) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 09:00 மணியளவில் விகாரைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு, ‘வட இலங்கை துணை தலைமைச் சங்கநாயக’ பதவி வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கௌரவிப்பு நிகழ்வுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுமையான ஆதரவுடன் ஒரு முக்கிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தையிட்டி விகாரைக்கு முன்பாக “இது ஒரு சட்டவிரோதமான விகாரை” எனத் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தல் பலகை நாட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விகாரை விவகாரம் தொடர்பாகத் தையிட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...