images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

தனியார் காணிகள் விடுவிக்கப்படும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் – அமைச்சர் சுனில் செனவி!

Share

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இன்று தையிட்டியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் கைது சம்பவங்களைத் தொடர்ந்து, எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தையிட்டி விஹாரை அமைந்துள்ள பகுதிகளில் அமைச்சின் அதிகாரிகள் தற்போது நில அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர். விஹாரைக்கு அவசியமான காணிகளைத் தவிர்ந்த, எஞ்சிய தனியார் காணிகளை அதன் உரிய உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விஹாராதிபதிக்கு வழங்கப்படுவது பௌத்த கலாசார ரீதியிலான ஒரு சான்றிதழ் மட்டுமே. இது பாடசாலைகளில் வழங்கப்படும் பதவி உயர்வு போன்றதல்ல. எனவே, இந்தச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வையும், காணிப் பிரச்சினையையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தையிட்டி பகுதியில் நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தர்க்கரீதியான மற்றும் நியாயமான தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தையிட்டியில் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, வேலன் சுவாமிகள் மற்றும் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...