parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (நவம்பர் 27) காலை 9.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காகப் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பின்வரும் தகவல்களைத் தெரிவித்தார்:

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி இன்று அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று நண்பகலுக்குள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உரிய துறைகளைச் சார்ந்த அமைச்சர்களும் கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...