1768310432 articles2Fa5gVbadaZHsNNRaO5GvG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்வி மறுசீரமைப்பிற்குப் புதிய சட்டக் கட்டமைப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அநுர ஆலோசனை!

Share

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவுரையாளர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு மிக அவசியமானவை என்பதை விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்கலைக்கழக கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தங்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய கோரிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

பல்கலைக்கழகக் கல்வி மற்றும் அதன் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில்:

“பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்தச் தேசியப் பணிக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.”

கல்விச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்றுள்ள விரிவுரையாளர்கள், அதற்கான தமது முழுமையான ஆதரவை வழங்கவும் முன்வந்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...