WhatsApp Image 2026 01 02 at 9.40.39 AM
செய்திகள்அரசியல்இலங்கை

மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

Share

புத்தாண்டை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கை அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகம்.

நேற்று வியாழக்கிழமை (01) பிற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, அமரபுர மகா பீடத்தின் மகா நாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை நேரில் சந்தித்தார்.

இதன்போது மகா நாயக்க தேரரின் நலம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் சுமுகமாக உரையாடினார். இந்தச் சந்திப்பின் போது, மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு செத்பிரித் பாராயணம் செய்து, புத்தாண்டிற்கான ஆசீர்வாதங்களை வழங்கினர்.

ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெறும் வழக்கத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...