09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

Share

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை (Energy Security) உறுதிப்படுத்த மக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (மார்ச் 23, 2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்புகளை விடுத்தார்.

நாட்டின் மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் (Peak Hours) மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில், மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது குறித்துப் பொதுமக்களுக்கு விரிவான முறையில் தெளிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம், தேசிய மட்டத்தில் ஏற்படக்கூடிய மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் (Billboard Advertisements) மற்றும் அலங்கார மின் கட்டமைப்புகளின் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அத்துடன், நகர்ப்புறங்களில் தேவையற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் போக்குவரத்து அமைச்சின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் குறித்தும் இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அரச மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலில், வலுசக்தியைச் சரியான முறையில் கையாள்வது ஒவ்வொரு இலங்கையரினதும் தேசப்பற்றுடன் கூடிய பொறுப்பாகும் என ஜனாதிபதி இதன்போது நினைவூட்டினார். இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருள் இருப்பைப் பாதுகாப்பதற்கான மேலதிக திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...